அனுமதியின்றி மாரத்தான் போட்டி நடத்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் 30 பேர் மீது வழக்கு

அனுமதியின்றி மாரத்தான் போட்டி நடத்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் 30 பேர் மீது வழக்கு

Update: 2022-01-16 17:02 GMT
சங்கராபுரம்

சங்கராபுரம் அருகே உள்ள கொசப்பாடி கிளை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் நீட் எதிர்ப்பு, போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பாலியல் வன்முறைக்கு எதிரான மாரத்தான் போட்டி பூட்டையில் இருந்து கொசப்பாடி வரை நடத்தப்பட்டது. ஆனால் இதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. 

இந்த நிலையில் அனுமதியின்றி மாரத்தான் போட்டியை நடத்திய இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் ஏழுமலை, வட்ட தலைவர் பாஸ்கர், கிளை செயலாளர் பகத்சிங் உள்பட 30 பேர் மீது சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

மேலும் செய்திகள்