கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-01-17 16:14 GMT
கமுதி.
கமுதி அடுத்துள்ள உலக நடை கிராமத்தைச் சேர்ந்த கர்ணன் மனைவி வசந்தி (வயது29). இவர் தனது தந்தை ஊரான செங்கப்படைக்கு சென்று அங்கு இரவில் வீட்டு வாசலில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அதே ஊரை சேர்ந்த பஞ்சாட்சரம் மகன் ஞானசேகரன் (32) தகாத வார்த்தைகளால் பேசி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்த புகாரின்பேரில் கமுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஞானசேகரனை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்