விழுப்புரம் அருகே கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் கைது
விழுப்புரம் அருகே கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் கைது
விழுப்புரம்
விழுப்புரம் அருகே ஆலாத்தூர் மதுரைவீரன் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார் (வயது 35). இவர் நேற்று காலை விழுப்புரம் விராட்டிக்குப்பம் பாதை அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது விழுப்புரம் அருகே பிடாகம் கிராமத்தை சேர்ந்த லட்சுமணன்(38) என்பவர் குமாரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.ஆயிரத்தை பறித்துச்சென்றுவிட்டார்.
இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து லட்சுமணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.