141 பேருக்கு கொரோனா
141 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 141 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் 21 ஆயிரத்து 806 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று சிகிச்சை முடிந்து 87 பேர் வீடு திரும்பி உள்ளார். இதுவரை 20 ஆயிரத்து 663 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 782 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர்.