ெரயிலில் அடிபட்டு ஒருவர் பலி

ராஜபாளையத்தில் ரெயிலில் அடிபட்டு ஒருவர் பலியானார்.

Update: 2022-01-19 21:15 GMT
ராஜபாளையம்,
ராஜபாளையம் அருகே உள்ள எஸ்.ராமலிங்காபுரத்தை சேர்ந்தவர் முருகன் (வயது50). இவருக்கு காது கேட்பதில் குறைபாடு இருந்ததாக கூறப்படுகிறது. இவர் சொந்தமாக ஆடுகளை வளர்த்து வந்தார். ஆடுகளுக்கு தேவையான இலைகளை அருகில் உள்ள விவசாய நிலங்களில் இருந்து பறித்து வருவது வழக்கம். வழக்கம்போல் இலை பறிப்பதற்காக ெரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்லும்போது சென்னையில் இருந்து செங்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்த ெரயில் அவர் மீது மோதியதில் முருகன் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் ெரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முருகனின் உடலை கைப்பற்றினர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்