அரியலூரில் 145 பேருக்கு கொரோனா

அரியலூரில் 145 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

Update: 2022-01-20 18:21 GMT
அரியலூர், 
அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 145 கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,698 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே 265 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மாவட்டத்தில் மொத்தம் 16,850 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் தற்போது கொரோனாவுக்கு 583 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 1,427 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 123 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,241 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே 247 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மாவட்டத்தில் மொத்தம் 12,357 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவிற்கு தற்போது 637 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 373 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

மேலும் செய்திகள்