கண்மாயில் மூழ்கி ஒருவர் பலி

திருச்சுழி அருகே கண்மாயில் மூழ்கி ஒருவர் பலியானார்.

Update: 2022-01-20 20:32 GMT
காரியாபட்டி, 
திருச்சுழி அருகே பள்ளிமடம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 51). இவர் கண்மாயில் குளித்து கொண்டிருந்த போது திடீரென்று நீரில் மூழ்கினார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் மற்றும் அவரது உறவினர்கள் பாலசுப்பிரமணியனை மீட்டு  108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சுழி அரசுமருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், பாலசுப்பிரமணியன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது. இதுகுறித்து திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்