வங்கி ஊழியர்களுக்கு கொரோனா

அன்னவாசலில் வங்கி ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

Update: 2022-01-22 17:50 GMT
அன்னவாசல், 
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியான எஸ்.பி.ஐ. உள்ளது. இந்த வங்கியில் பணிபுரியும் ஊழியர்கள் 2 பேருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைதொடர்ந்து அவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். இதில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து வங்கியில் பணிபுரிந்த மற்ற ஊழியர்களும் கொரோனா பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டனர். இதனால் நேற்று முன்தினம் முதல் வங்கி மூடப்பட்டு வங்கியின் கதவில் வங்கியின் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதன் காரணமாக வங்கி விடுமுறை என்றும் அருகில் உள்ள வங்கி கிளைகளை அணுகவும் என பதாகை வைக்கப்பட்டுள்ளது. இதனால் வங்கியில் பணம் செலுத்த சென்ற வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பி சென்றனர்.

மேலும் செய்திகள்