மணப்பாறை, ஜன.23-
மணப்பாறையை அடுத்த செவலூர் பிரிவு சாலை அருகே மதுபாட்டில் விற்றதாக வாகைக்குளம் பகுதியை சேர்ந்த ரமேஷ் (வயது 41), டி.உடையாபட்டியைச் சேர்ந்த நெல்சன்ராஜ் (25) ஆகியோரை மணப்பாறை போலீசார் கைது செய்தனர்.மேலும் அவர்களிடம் இருந்து 90 மதுபாட்டில்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். இதே போல் புத்தாநத்தம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆன்லைன் லாட்டரி மற்றும் மதுபாட்டில் விற்றதாக குளவாய்பட்டியைச் சேர்ந்த ராமன் (62), வடக்கிக்களம் பகுதியைச் சேர்ந்த சங்கிலி (39 ) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மணப்பாறையை அடுத்த செவலூர் பிரிவு சாலை அருகே மதுபாட்டில் விற்றதாக வாகைக்குளம் பகுதியை சேர்ந்த ரமேஷ் (வயது 41), டி.உடையாபட்டியைச் சேர்ந்த நெல்சன்ராஜ் (25) ஆகியோரை மணப்பாறை போலீசார் கைது செய்தனர்.மேலும் அவர்களிடம் இருந்து 90 மதுபாட்டில்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். இதே போல் புத்தாநத்தம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆன்லைன் லாட்டரி மற்றும் மதுபாட்டில் விற்றதாக குளவாய்பட்டியைச் சேர்ந்த ராமன் (62), வடக்கிக்களம் பகுதியைச் சேர்ந்த சங்கிலி (39 ) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.