கொரோனாவுக்கு முதியவர் பலி

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு முதியவர் உயிரிழந்தார்.

Update: 2022-01-22 20:24 GMT
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 113 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு்ள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,490 ஆக உயர்ந்துள்ளது. அதில் ஏற்கனவே 247 பேர் உயிரிழந்துள்ள நிலையில், வேப்பந்தட்டையை சேர்ந்த 72 வயதுடைய முதியவர் ஒருவர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறந்தவர் 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் மாவட்டத்தில் மொத்தம் 12,544 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவிற்கு தற்போது 698 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 339 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 163 பேர் கொரோனவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,047 ஆக உயர்ந்துள்ளது. அதில் ஏற்கனவே 265 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மாவட்டத்தில் மொத்தம் 16,962 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் தற்போது கொரோனாவுக்கு 820 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 1,203 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்