நூற்பு மில்லில் பயங்கர தீ விபத்து

விருதுநகரில் நூற்பு மில்லில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.

Update: 2022-01-23 19:17 GMT
விருதுநகர், 
விருதுநகர் பேராலி ரோட்டில் மாரியப்பன்(வயது 39) என்பவருக்கு சொந்தமான நூற்பு மில் உள்ளது. நேற்று முழுஊரடங்கு காரணமாக நூற்பு மில் செயல்படவில்லை. இந்நிலையில் மதியம் 3 மணியளவில் திடீரென மில்லில் தீப்பிடித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த விருதுநகர் தீயணைப்பு படையினர் நிலைய அதிகாரி கண்ணன் தலைமையில் விரைந்தனர். 2 தீயணைப்பு வண்டிகளில் சென்ற தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.  மில்லில் இருந்த எந்திரங்கள் மற்றும் பஞ்சு பொதிகள் தீயில் எரிந்து நாசமாயின. மாவட்ட தீயணைப்பு அதிகாரி கணேசன், உதவி அதிகாரி மணிகண்டன் ஆகியோர் தலைமையில் தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து பாண்டியன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்