திருக்கோவிலூர் அருகே 200 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
திருக்கோவிலூர் அருகே 200 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
திருக்கோவிலூர்
கண்டாச்சிபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் திருக்கோவிலூரை அடுத்த வீரங்கிபுரம் கிராமத்தில் உள்ள இருளர்புரம் கல்லாங்குத்து பகுதியில் சாராய வேட்டை நடத்தினர். இதில் 200 லிட்டர் சாராய ஊறல் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்த போலீசார் அவற்றை தரையில் கொட்டி அழித்தனர். இது தொடர்பாக அருணாபுரம் கிராமத்தை சேர்ந்த மணிகூண்டு என்பவரின் மகன் பிரபாகரன்(வயது 45) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.