கையை பிளேடால் அறுத்து கொண்டு இளம்பெண் தற்கொலை

கையை பிளேடால் அறுத்து கொண்டு இளம்பெண் தற்கொலை

Update: 2022-01-25 17:25 GMT
நாகர்கோவில், 
குலசேகரம் அருகே உள்ள அருவிக்கரை மாத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஷிபு (வயது 29). இவருக்கும் தக்கலை பள்ளியாடியை சேர்ந்த அர்ச்சனா (26) என்பவருக்கும் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. தம்பதிக்கு ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. திருமணத்திற்கு பிறகு ஷிபு வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் அர்ச்சனாவின் உடல்நிலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாதிக்கப்பட்டது. இதற்காக அவர் தனது குழந்தையுடன் தக்கலை பள்ளியில் உள்ள அவரது பெற்றோர் வீட்டில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையே நேற்று முன்தினம் அர்ச்சனாவின் பெற்றோர் குழந்தையுடன் உறவினர் ஒருவரின் வீட்டிற்கு சென்றனர். அப்போது வீட்டில் தனியாக இருந்த அர்ச்சனா திடீரென தனது கையை பிளேடால் அறுத்தும், விஷம் குடித்து வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்தார்.
அப்போது அங்கு வந்த அக்கம் பக்கத்தினர், ஆபத்தான நிலையில் இருந்த அர்ச்சனாவை மீட்டு சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அர்ச்சனா பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-----

மேலும் செய்திகள்