மாவட்டத்தில் புதிதாக 293 பேருக்கு கொரோனா தொற்று

புதிதாக 293 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

Update: 2022-01-26 18:36 GMT
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 293 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 32 ஆயிரத்து 640 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 161 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 30 ஆயிரத்து 922 ஆக உயர்ந்தது. கொரோனாவுக்கு தற்போது 1,295 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தர்களின் எண்ணிக்கை 423 ஆக உள்ளது. ஆதனக்கோட்டை சுகாதார நிலைய வட்டாரத்தில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

மேலும் செய்திகள்