கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-01-28 17:22 GMT
ராமேசுவரம், 
தங்கச்சிமடத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில்  தமிழக மீனவர்களின் மீன்பிடி படகுகளை ஏலம் விடுவதாக அறிவித்துள்ள இலங்கை அரசை கண்டித்தும், இலங்கை கடற்படையால் பிடித்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை உடனடியாக சீரமைத்து மீட்டு தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்க மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்தியும், பாரம்பரிய கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படை பிரச்சினை இல் லாமல் மீன் பிடிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வங்கி ஒன்றின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப் பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தாலுகா கிளைச் செயலாளர் ரவிச்சந்திரன், துணை செயலாளர் காளிதாஸ் மற்றும் நிர்வாகிகள் பீட்டர், இன்னாசிமுத்து, ஆரோக்கிய நாதன், பாபு, கிருபாகரன், சவேரியார் அடிமை, ஜார்ஜ், திருச்செல்வமணி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்