தொழிலாளி விஷம் குடித்து சாவு

சாயர்புரத்தில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்

Update: 2022-01-31 13:03 GMT
சாயர்புரம்:
சாயர்புரம் போப் தெருவை சேர்ந்த ஞானப்பிரகாசம் மகன் சாலமோன் ராஜா(வயது 41). இவர் சாயர்புர த்தில் ஒரு தனியார் பெட்ரோல் பங்க்கில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் கடன் பிரச்சினையால் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்த நிலையில் கடந்த 27-ந் தேதி வீட்டின் இருந்த கலைக்கொல்லி பூச்சி மருந்தை குடித்து விட்டாராம். குடும்பத்தினர் இவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் அவர் இறந்துவிட்டார். இது தொடர்பாக சாலமோன் ராஜா மனைவி அமலா ராணி சாயர்புரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சாயர்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிந்தா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்