வாணியம்பாடியில் உரிய ஆவணம் இன்றி எடுத்துச்சென்ற ரூ.3 லட்சம் பறிமுதல்

வாணியம்பாடியில் உரிய ஆவணம் இன்றி எடுத்துச்சென்ற ரூ.3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-01-31 18:19 GMT
வாணியம்பாடி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க பறக்கும்படை அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி புதூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி சித்ரா தலைமையிலான குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த பெத்தவேப்பம்பட்டு பகுதியை சேர்ந்த சரத்குமார் (வயது 22) என்பவரை நிறுத்தி சோதனை செய்தபோது வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.3 லட்சம் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்ப்டது. அந்த பணத்தை பறிமுதல் செய்து வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையாளரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ஸ்டான்லி பாபுவிடம் ஒப்படைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்