வாலிபருக்கு அரிவாள் வெட்டு: நண்பர் கைது

தூத்துக்குடி அருகே வாலிபரை அரிவாளால் வெட்டிய நண்பரை போலீசார் கைது செய்தனர்

Update: 2022-03-11 11:44 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை திரவியபுரத்தை சேர்ந்தவர் வெள்ளப்பாண்டி. இவருடைய மகன் மாரிமுத்து (வயது 33). இவரும், மறவன்மடம் இந்திராநகரை சேர்ந்த பாஸ்கர் மகன் சிவா மகராஜன் (27) என்பவரும் நண்பர்கள் ஆவர். இவர்கள் 2 பேரும் அந்த பகுதியில் பதநீர் குடித்து உள்ளனர். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இந்த முன்விரோதத்தில் நேற்று முன்தினம் வீட்டில் தூங்கி கொண்டு இருந்த மாரிமுத்தை, சிவாமகராஜன் அரிவாளால் வெட்டினாராம்.
இதில் பலத்த காயம் அடைந்த மாரிமுத்து சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்கு பதிவு செய்து சிவா மகராஜனை கைது செய்தார்.

மேலும் செய்திகள்