திருவாரூரில் தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருவாரூரில், தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Update: 2022-03-29 19:46 GMT
திருவாரூர்:
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி திருவாரூரில் தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அகவிலைப்படி, சரண் விடுப்பு போன்ற பறிக்கப்பட்ட சலுகைகளை உடனே வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு அளித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்கத்தின் மாநில நிர்வாகிகளால் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி நேற்று திருவாரூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்க மாவட்ட மையம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட பொருளாளர் செல்வம் தலைமை தாங்கினார். முன்னாள் பொதுச் செயலாளர் அருணாசலம், மாநில தலைவர் செந்தில்குமார், மாவட்ட பொருளாளர் செங்குட்டுவன், அரசு ஊழியர் சங்க வட்ட செயலாளர் தம்பிதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சங்கத்தின் இணை செயலாளர் வினோத் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்