தீக்குளித்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி சாவு

தம்பி இறந்த சோகத்தில் தீக்குளித்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-04-05 18:55 GMT
தோகைமலை, 
தோகைமலை அருகே பண்ணப்பட்டி ஊராட்சி, பாறைபட்டியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 35), தொழிலாளி. இவருடைய மனைவி பானுப்பிரியா. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில், முத்துகிருஷ்ணன் தம்பி கருப்பையா கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இறந்தார். இதனால் மன வேதனையில் இருந்த முத்துகிருஷ்ணன் கடந்த 1-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீவைத்துக்கொண்டார். இதில், உடல் கருகிய அவரை அப்பகுதி மக்கள் மீட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி முத்துகிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்