தண்ணீர் பந்தல் திறப்பு

தி.மு.க.சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.

Update: 2022-04-06 19:10 GMT
கச்சிராயப்பாளையம், 

வடக்கனந்தலில் நகர தி.மு.க. சார்பில்  தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு பேரூராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கி தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு தண்ணீர் மற்றும் மோர் உள்ளிட்டவற்றை வழங்கினார். இதில் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் தண்டபாணி, கவுன்சிலர்கள் சின்னதுரை, மம்முபாலு, தசரதன், இலக்கியா குணசேகரன், மாயக்கண்ணன், சந்தியா, தி.மு.க. நிர்வாகி குணசேகரன், கரிகாலன், முத்து, ஜெயவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்