தர்மபுரியில் லாரி டிரைவர் வீட்டில் நகை பணம் திருட்டு

தர்மபுரியில் லாரி டிரைவர் வீட்டில் நகை, பணம் திருட்டு போனது.

Update: 2022-04-13 16:52 GMT
தர்மபுரி:
தர்மபுரி இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 41). லாரி டிரைவர். இவருடைய வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 3 பவுன் நகை, வெள்ளி கொலுசு, ரூ.32 ஆயிரம் ஆகியவற்றை திருடி சென்றனர். இதுகுறித்து சுரேஷ் தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்