பிரதோஷ வழிபாடு

எஸ்.புதூர் அருகே கரிசல்பட்டியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் தமிழ் புத்தாண்டு, பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

Update: 2022-04-14 19:22 GMT
எஸ்.புதூர், 
எஸ்.புதூர் அருகே கரிசல்பட்டியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் தமிழ் புத்தாண்டு, பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி நந்தீஸ்வரர் மற்றும் கைலாசநாதருக்கு 11 வகையான அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. இதேபோல் உலகம்பட்டியில் உலநாயகி சமேத உலகநாத சாமி கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. அதனை தொடர்ந்து உலகநாயகி சமேத உலகநாத சாமி ரிஷப வாகனத்தில் உள்மண்டப பிரகாரத்தில் எழுந்தருளினர். இந்த நிகழ்ச்சியில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்