திருச்சி மாவட்டத்தில் 29-ந்தேதி உள்ளூர் விடுமுறை

திருச்சி மாவட்டத்தில் 29-ந்தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-04-21 20:53 GMT
திருச்சி:
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தேரோட்டத்தையொட்டி வருகிற 29-ந் தேதி (வெள்ளிக்கிழமை) திருச்சி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் இது பொருந்தும். எனினும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் தேர்வுகள் நடைபெற்றால் இந்த விடுமுறை பொருந்தாது. மேற்கண்ட விடுமுறை நாளில் மாவட்டத்தில் அரசு பாதுகாப்பு தொடர்பான அவசர அலுவல்களை கவனிக்கும் வகையில், மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலகங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். இந்த விடுமுறைக்கு பதிலாக அடுத்த மாதம் (மே) 7-ந் தேதி வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது என்று திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்