லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது
லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
அரியலூர்,
அரியலூர் தாண்டவராய தெருவில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பதாக பல்வேறு புகார்கள் வந்தன. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அதே தெருவை சேர்ந்த ஆனந்த் (வயது 43), சந்தன மாதா கோவில் தெருவை சேர்ந்த ஆரோக்கியராஜ் (50) ஆகியோர் லாட்டரி சீட்டுகளை விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து செல்போன், லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.