வளையப்பட்டி சோதனைசாவடி பகுதியில் முதியவர் பிணம் யார் அவர்? போலீசார் விசாரணை
வளையப்பட்டி சோதனைசாவடி பகுதியில் முதியவர் பிணம் யார் அவர்? போலீசார் விசாரணை
எருமப்பட்டி:
எருமப்பட்டி அருகே உள்ள வளையப்பட்டி சோதனைசாவடி பகுதியில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக எருமப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக அங்கு வந்தார்? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.