திருமணமான 7 மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

பாணாவரம் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2022-05-06 17:35 GMT
காவேரிப்பாக்கம்

ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரத்தை அடுத்த வள்ளுவம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பரசுராமன் (வயது 25) விவசாய கூலிதொழிலாளி. இவருக்கும் பாணாவரம் அடுத்த ரங்காபுரம் கிராமத்தை சேர்ந்த உமாபதி என்பவரின் மகள் சினேகா (22) என்பவருக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கடந்த வாரம் சினேகா தனது தாய் வீட்டுக்கு சென்றுவருவதாக கூறி சென்றுள்ளார். அங்கு யாருடனும் பேசாமல் தனிமையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

 சினேகா வீட்டைவிட்டு வெளியே சென்று வருவதாக கூறி சென்றவர் இரவு வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்தநிலையில் அங்குள்ள விவசாய நிலத்தில் உள்ள வேப்பமரத்தில் சினேகா தூக்கில் தொங்கினார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பாணாவரம் போலீசார் விரைந்து வந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

திருமணமாகி 7 மாதமே ஆவதால் இதுகுறித்து ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி, அரக்கோணம் துணைபோலீஸ் சூப்பிரண்டு புகழேந்தி கணேஷ் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்