அனுமதியின்றி மணல் அள்ளிவந்தவர் கைது
அனுமதியின்றி மணல் அள்ளிவந்தவர் கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் பஜார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராமு தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ராமநாதபுரம் அருகே இடையர்வலசை பகுதியில் வழியாக வந்த லாரியை மடக்கி சோதனை யிட்டபோது அதில் அனுமதியின்றி 3 யூனிட் மணல் அள்ளி வந்தது தெரிந்தது. இதனை தொடர்ந்து மணலுடன் லாரியை பறிமுதல் செய்த போலீசார் இதுதொடர்பாக சிவகங்கை மாவட்டம் சாலைகிராமம் கலைநகரை சேர்ந்த மலைச்சாமி மகன் கமல்ராஜ் (28) என்பவரை கைது செய்தனர்.