பெண் தீக்குளிப்பு

பெண் தீக்குளித்தார்

Update: 2022-05-10 19:55 GMT
திருச்சி பாலக்கரை கீழ கிருஷ்ணன்கோவில் தெருவை சேர்ந்தவர் வடிவேல். பெயிண்டர். இவருடைய மனைவி மலர்க்கொடி (31). இவர் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். பலத்த தீக்காயம் அடைந்த அவர் திருச்சி அரசு மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் பாலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்