பெண்ணிடம் ரூ.5¾ கோடி மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது

பெண்ணிடம் ரூ.5¾ கோடி மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது

Update: 2022-05-10 20:05 GMT
திருச்சி, மே.11-
திருச்சி கே.கே.நகர் அய்யப்பநகரை சேர்ந்தவர் செல்வராணி (வயது 47). இவரிடம், திருச்சி மணிகண்டம் அருகே ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வந்த தஞ்சையை சேர்ந்த லதாசாய்ராம், சென்னையை சேர்ந்த சாந்திராஜாராம் உள்ளிட்ட 20 பேர் ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என ஆசை வார்த்தை கூறினர். இதை நம்பிய செல்வராணி தனது நண்பர்களிடம் எடுத்துக்கூறி, பல்வேறு நபர்களிடம் வசூலித்த ரூ.5 கோடியே 48லட்சத்தை கொடுத்தார்.அதன்பிறகுபணம்செலுத்தியவர்களுக்கு லாபத்தொகை தரவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து செல்வராணி அளித்த புகாரில், மாநகர குற்றப்பிரிவு போலீசார் 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு தொடர்பாக திருச்சி ராஜா காலனியை சேர்ந்த பாபு, பீமநகரை சேர்ந்த சாகுல்அமீது,பஷீர்அகமது ஆகிய 3 பேரை கைதுசெய்தனர்.இந்தநிலையில்இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த புதுக்கோட்டையை சேர்ந்த ராஜப்பா (43) ஏற்கனவே ஒரு வழக்கில் ராமநாதபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மாநகர குற்றப்பிரிவு போலீசார் திருச்சி மோசடி வழக்கிலும் அவர் மீது கோர்ட்டில் பிடிவாரண்டு பெற்று ராஜப்பாவை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்