திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கள்ளர் தெருவில், பிடாரி என்கிற குளுந்தாளம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தேர் திருவிழா நடந்தது. இதில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முன்னதாக கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.