மரத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; விவசாயி பலி

மரத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலியானார்.

Update: 2022-05-11 15:48 GMT
உப்புக்கோட்டை:

குச்சனூர் அருகே உள்ள துரைச்சாமிபுரம் நடுத்தெருவை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 40). விவசாயி. நேற்று முன்தினம் இவர், தனது உறவினரான அருண்குமார் (17) மற்றும் அய்யனார் (15) ஆகியோரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு வெங்கடாசலபுரம்-தர்மபுரி சாலையில் சென்று கொண்டிருந்தார். 

வீரபாண்டி அருகே வந்தபோது சாலையோரத்தில் கண்மாய் கரையில் நின்று கொண்டிருந்த மரத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஈஸ்வரன் நேற்று பரிதாபமாக இறந்தார். 

மேலும் அருண்குமார், அய்யனார் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்