ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2022-05-11 16:18 GMT
கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
ரவுடி
ஸ்ரீரங்கம் வீரேஸ்வரம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற மின் பொறியாளர் ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.2 ஆயிரம் மற்றும் மோட்டார் சைக்கிளை பறித்து சென்றதாக கடந்த மாதம் 3-ந் தேதி பெறப்பட்ட புகாரின்பேரில், ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பணம் பறித்த ரவுடி மகாமுனியை (வயது 36) கைது செய்து சிறையில் அடைத்தனர்.
விசாரணையில் மகாமுனி மீது திருச்சி மாவட்ட போலீஸ் நிலையங்களில் கஞ்சா வழக்கு உள்பட 19 வழக்குகளும், திருச்சி மாநகர போலீஸ் நிலையங்களில் 6 வழக்குகளும் என மொத்தம் 25 வழக்குகள் இருந்தது தெரியவந்தது. எனவே அவர் தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணத்தில் இருந்தது தெரியவந்ததால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். இதையடுத்து திருச்சி சிறையில் அடைக்கப்பட்டு இருந்த மகாமுனியை குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகல் நேற்று வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்