சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது

சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-05-11 17:19 GMT
கரூர்
குளித்தலை
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள எம்.புதுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சபரிநாதன் (வயது 26). இவர் கோயமுத்தூரில் உள்ள ஓட்டலில் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் சபரிநாதன் 17 வயது சிறுமியை இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளார். தற்போது சிறுமி 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதுகுறித்து கிருஷ்ணராயபுரம் சமூக நல அலுவலர் சுகுணா குளித்தலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், சபரிநாதன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர். மேலும் குழந்தை திருமண தடுப்புச்சட்டத்தின் கீழ் சபரிநாதனின் தந்தை பாலசுப்பிரமணியன், தாய் வசந்தா மற்றும் சிறுமியின் தாய் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்