பயிர்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்

பெரும்பாறை அருகே காட்டு யானைகள் தோட்டங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தின.

Update: 2022-05-11 17:28 GMT
பெரும்பாறை: 

பெரும்பாறை அருகே உள்ள தாண்டிக்குடி, மங்களம்கொம்பு, கானல்காடு, தடியன்குடிசை உள்ளிட்ட மலைக்கிராமங்களில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. அந்த யானைகள் இரவு நேரங்களில் விவசாய நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக மங்களம்கொம்பு பகுதியில் உள்ள தோட்டங்களில் 2 காட்டு யானைகள் புகுந்து வாழை, காபி, ஆரஞ்சு போன்ற பயிர்களை சேதப்படுத்தின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இந்த பகுதியில் காட்டு யானைகள் புகுவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்