லாரி டிரைவர் தற்கொலை

நிலக்கோட்டை அருகே கடன் தொல்லையால் விரக்தி அடைந்து லாரி டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-05-11 17:35 GMT
நிலக்கோட்டை: 

நிலக்கோட்டை அருகே உள்ள என்.புதுப்பட்டியை சேர்ந்தவர் பாலாஜி (வயது 41). லாரி டிரைவர். இவருக்கு சரிவர டிரைவர் வேலை கிடைக்கவில்லை. இதனால் அக்கம்பக்கத்தினரிடம் கடன் வாங்கி அதே பகுதியில் பலசரக்கு கடை வைத்தார். இதற்கிடையே அவருக்கு உடல்நிலை பாதிப்பும் ஏற்பட்டதால் கடனை திரும்ப கொடுக்க முடியவில்லை. கடன் தொல்லையால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட பாலாஜி சம்பவத்தன்று இரவு மனைவி, குழந்தைகள் தூங்கியபிறகு, வீட்டின் முன்புறத்தில் தூக்கில் தொங்கினார். இதனை பார்த்த அவரது மனைவி மற்றும் அக்கம்பக்கத்தினர் பாலாஜியை மீட்டு சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பாலாஜி இறந்தார். இதுகுறித்து நிலக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்