சாலையின் குறுக்கே சாய்ந்த தென்னை மரம்

சாலையின் குறுக்கே சாய்ந்த தென்னை மரம்

Update: 2022-05-11 17:51 GMT
குளச்சல்:
குளச்சல் அருகே உள்ள உடையார்விளை பகுதியில் நேற்று மாலையில் சாலையோரம் நின்ற தென்னை மரம் சாய்ந்தது. இந்த மரம் சாலையின் குறுக்காகவும், சாலையோரம் நின்ற லாரியின் மீதும் விழுந்தது. இதில் லாரி சேதமடைந்தது. மேலும் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. 
இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பின்னர் தென்னை மரத்தை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர்.

மேலும் செய்திகள்