கந்தர்வகோட்டை அருகே தீக்குளித்து இளம்பெண் தற்கொலை

கந்தர்வகோட்டை அருகே தீக்குளித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-05-11 18:07 GMT
கந்தர்வகோட்டை: 
இளம்பெண் 
கந்தர்வகோட்டை அருகே கறம்பக்குடி சாலையில் மண்டலே நகரை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகள் ஷாலினி (வயது 18). இவர் கடந்த ஆண்டு பிளஸ்-2 படித்து முடித்து வீட்டில் இருந்து வந்தார். மேலும், கல்லூரியில் சேர்ந்து படிக்க இவரால் முடியவில்லை. இதனால் தனியார் கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். 
இந்த நிலையில் தனது தந்தையிடம் நான் கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு அவருடைய தந்தை கல்லூரி திறக்கட்டும் பார்த்துக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.மேலும் சென்ற ஆண்டு கல்லூரியில் சேராததால் ஓராண்டு படிப்பு வீணானதை எண்ணி மிகுந்த மனவேதனையில் ஷாலினி இருந்துள்ளார். 
சிகிச்சை பலனின்றி சாவு 
இதனால் மனமுடைந்த ஷாலினி நேற்று இரவு உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்து தீக்காயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி இன்று ஷாலினி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஷாலினியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் கந்தர்வகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்