வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு

அருப்புக்கோட்டையில் வீட்டின் கதவை உடைத்து நகையை திருடி சென்றனர்.

Update: 2022-05-11 19:18 GMT
அருப்புக்கோட்டை, 
அருப்புக்கோட்டை ராமசாமி நகர் பகுதியை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (வயது50). இவருடைய நண்பர் நாராயணபுரத்தை சேர்ந்த நடராஜன் என்பவர் வெளியூர் சென்றதால் தனது வீட்டின் சாவியை ஹரிகிருஷ்ணனிடம் ஒப்படைத்து சென்றுள்ளார். ஹரிகிருஷ்ணன் தினமும் மாலை வேளையில் நடராஜன் வீட்டிற்கு சென்று சிறிது நேரம் லைட் போட்டு விட்டு கதவை மூடிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில் ஹரிகிருஷ்ணன் வழக்கம் போல் நடராஜன் வீட்டிற்கு சென்றார். அப்ேபாது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 2 பவுன் தங்க நகை, ரூ.15 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது. நடராஜன் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி.கேமராவினையும், ஹார்ட் டிஸ்கினையும் கொள்ளையடித்து  சென்றனர். இதுகுறித்து ஹரிகிருஷ்ணன் தாலுகா போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்