கல்லூரிக்கு செல்லாததை பெற்றோர் கண்டித்ததால் விஷம் குடித்து மாணவர் தற்கொலை

கல்லூரிக்கு செல்லாததை பெற்றோர் கண்டித்ததால் விஷம் குடித்த மாணவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-05-11 21:22 GMT
குன்னம், 
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கீழப்பெரம்பலூர் கிராமம் பிள்ளையார் கோவில் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர், வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் சதீஷ் (வயது 18). இவர் தனியார் தொழில்நுட்ப கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்தநிலையில் சதீஷ் கல்லூரிக்கு செல்லாமல் ஊரை சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதனை அவரது பெற்றோர் கண்டித்து உள்ளனர். இதனால் மனமுடைந்த சதீஷ் கடந்த 7-ந் தேதி வீட்டின் அருகே உள்ள காட்டில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளார். இதை அறிந்த உறவினர்கள் அவரை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் இரவு சதீஷ் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்