நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் பணி வழங்கக்கோரி ஊர்வலமாக சென்று இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மனு

இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மனு அளித்தனர்.

Update: 2022-05-12 18:45 GMT
கீரனூர்:
குன்றாண்டார்கோவில் ஒன்றிய அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கீரனூர் காந்தி சிலையிலிருந்து பேரூராட்சி அலுவலகத்திற்கு ஒன்றிய தலைவர் பழனிச்சாமி தலைமையில் நூற்றுக்கணக்கான பேர் ஊர்வலமாக வந்தனர். பின்னர் பேரூராட்சி செயல் அலுவலர் சின்னச்சாமியிடம் மனு கொடுத்தனர். இதில் மாநில குழு உறுப்பினர் சண்முகம், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ஸ்ரீதர், மாவட்டக்குழு உறுப்பினர்கள், பேரூராட்சி கவுன்சிலர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்