ஆர்ப்பாட்டம் நடத்திய பா.ஜ.க.வினர் 8 பேர் மீது வழக்கு

ஆர்ப்பாட்டம் நடத்திய பா.ஜ.க.வினர் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-05-13 19:06 GMT
திருச்சி:
திருச்சி ராம்ஜிநகர் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதை தடுக்கக்கோரி பா.ஜ.க.வினர் நேற்று முன்தினம் அந்த பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அப்போது கஞ்சா விற்பனையை தடுக்கக்கோரி கோஷங்களை எழுப்பினார்கள். 
இந்தநிலையில் முன்அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக பா.ஜ.க. மாவட்ட செயலாளர் ஒண்டிமுத்து, மாவட்ட தலைவர் ராஜசேகர், நிர்வாகிகள் ராஜேந்திரன், சிவசுப்பிரமணியன், கண்ணன் உள்பட பா.ஜ.க.வை சேர்ந்த 8 பேர் மீது ராம்ஜிநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்