பெண்ணை அவதூறாக பேசிய 2 பேர் கைது

நெல்லை மேலப்பாளையத்தில் பெண்ணை அவதூறாக பேசிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-05-14 19:31 GMT
நெல்லை:
மேலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மாடசாமி. இவருடைய மனைவி சுடலியம்மாள். இவர் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவர் நாங்குநேரியை சேர்ந்த நம்பிராஜன் என்பவரிடம் ரூ.15 ஆயிரம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.
இந்த பணத்திற்கு வட்டி கொடுக்கவில்லை என்று கூறி நம்பிராஜன், சுந்தர் ஆகிய இருவரும் சுடலியம்மாள் வீட்டு சென்று அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது மகன் மாணிக்கம் மேலப்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நம்பிராஜன், சுந்தர் ஆகிய இருவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்