தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-05-16 17:24 GMT
டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்
கரூர் மாவட்டம் கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தின் அருகே வள்ளுவர்நகர் பகுதியில் பல ஆண்டுகளாக சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா மற்றும் பல்வேறு மர்ம காய்ச்சல் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், வள்ளுவர்நகர், கரூர். 
சாலையை ஆக்கிரமித்த சீமைக்கருவேல மரங்கள்
கரூர் மாவட்டம் திருக்காடுதுறையில் இருந்து கட்டிப்பாளையம் செல்வதற்கு புக்ழூர் வாய்க்கால் ஓரத்தில் நெடுகிலும் தார் சாலை போடப்பட்டுள்ளது. தார் சாலையின் இருபுறமும் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் சாலையில் நான்குசக்கர வாகனங்கள் செல்லும்போது ஒதுங்க முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், திருக்காடுதுறை, கரூர். 

மேலும் செய்திகள்