200-க்கும் மேற்பட்ட இந்தியர்களை நாடு கடத்த அமெரிக்கா தயாராக உள்ளது: சுஷ்மா சுவராஜ்

200-க்கும் மேற்பட்ட இந்தியர்களை நாடு கடத்த அமெரிக்க தயாராக உள்ளது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.

Update: 2017-03-25 07:26 GMT

புதுடில்லி, 

அமெரிக்காவில் இருந்து, 270 இந்தியர்களை வெளியேற்ற உள்ளதாக அமெரிக்கா அரசு தகவல் தெரிவித்துள்ளது' என வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.மக்களவையில் நேற்று இந்த தகவலை வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார். இது குறித்து சுஷ்மா சுவராஜ் கூறும் போது,  அமெரிக்காவில் வசிக்கும் 270 இந்தியர்களை வெளியேற்ற அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து விபரங்களை கேட்டுள்ளோம்.

.இந்த பட்டியலில் உள்ளவர்களை பற்றிய தகவல்கள் உறுதி செய்யப்படாத வரை, அதனை நாம் எப்படி நம்ப முடியும். இந்தியர்கள் என உறுதி செய்யப்பட்ட பின்னர் அவர்களை வெளியேற்ற வேண்டும் என கூறியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்