தேர்தல் கமி‌ஷனுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டி.டி.வி.தினகரன் கைது

அ.தி.மு.க. (அம்மா) அணி துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று நள்ளிரவில் கைது செய்யப்பட்டார்.

Update: 2017-04-26 00:30 GMT
புதுடெல்லி,

இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக அ.தி.மு.க. (அம்மா) அணியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேர்தல் கமி‌ஷனுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக வழக்கு தொடரப்பட்டது.

டெல்லியில் விசாரணை

இந்த வழக்கில் தேர்தல் கமி‌ஷனுக்கு லஞ்சம் கொடுக்க இடைத்தரகராக செயல்பட்ட சுகேஷ் சந்திரசேகர் என்பவர் கடந்த 16–ந் தேதி கைது செய்யப்பட்டார்.

அவர் கொடுத்த தகவலின் பேரில் டி.டி.வி. தினகரன் தேர்தல்
கமி‌ஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றது தெரியவந்தது.

இதையொட்டி டி.டி.வி.தினகரனை டெல்லி போலீசார் கடந்த 4 நாட்களுக்கு முன்பு டெல்லிக்கு வரவழைத்து விசாரணை நடத்தினார்கள்.

நள்ளிரவில் கைது

இந்த விசாரணை நேற்று இறுதிக்கட்டத்தை அடைந்தது.

அதைத் தொடர்ந்து டி.டி.வி.தினகரன் நேற்று இரவு 12 மணிக்கு டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

டி.டி.வி.தினகரனுடன், நண்பர் மல்லிகார்ஜூனா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

நீதிபதி முன் ஆஜர்

கைது செய்யப்பட்ட டி.டி.வி.தினகரன் மற்றும் அவரது நண்பரும் உடனடியாக நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப் படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்