இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படை இயக்குநராக ஆர்.கே.பச்நந்தா நியமனம்
இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படை இயக்குநராக ஆர்.கே.பச்நந்தா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புதுடெல்லி,
ஆர்.கே.பச்நந்தா தற்போது தேசிய பேரிடர் மீட்பு படையின இயக்குநராக செயல்பட்டு வருகிறார். விரைவில் இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படை இயக்குநராக ஆர்.கே.பச்நந்தா பதவி ஏற்க உள்ளார். இவர் மேற்கு வங்காளம் மாநிலத்தை சேர்ந்தவர். கடந்த 1983-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார். மத்திய தொழில் பாதுகாப்பு படை இயக்குநராக ஐ.பி.எஸ்.அதிகாரி ராஜீவ் ராய் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.