பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் ஸ்ரீநகரில் கைது
பிரிவினைவாத தலைவர்களில் ஒருவரான யாசின் மாலிக் ஸ்ரீநகரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீர் விடுதலை முண்ணனி இயக்க தலைவரும் பிரிவினைவாத தலைவர்களில் ஒருவருமான யாசின் மாலிக் ஸ்ரீநகரில் கைது செய்யப்பட்டார்.
யாசின் மாலிக்கின் மைசூமா இல்லத்தில் சோதனை நடத்திய காஷ்மீர் காவல்துறை அவரை தடுப்புக்காவலில் வைத்துள்ளது. காஷ்மீரில் கடந்த சில தினங்களாக பதட்டம் அதிகரித்துள்ள நிலையில், யாசின் மாலிக் கைது செய்யப்பட்டுள்ளார்.