அசாமில் மிதமான நிலநடுக்கம்:சேதம் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை
அசாமில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 3.4 ஆக பதிவானது.;
கவுகாத்தி,
வடகிழக்கு மாநிலமான அசாமில் இலேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோளில் 3.4 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தன. தலைநகர் கவுகாத்தி மற்றும் அதைச்சுற்றியுள்ள இடங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. மாலை 4.55 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.