காஷ்மீரில் ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளி கொண்டாட்டம்
பிரதமர் நரேந்திர மோடி காஷ்மீரில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்.
ஸ்ரீநகர்,
வட இந்தியாவில் தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி காஷ்மீரில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்.
ஸ்ரீநகரில் இருந்து 123 கி.மீ. தூரத்தில் குரூஸ் ராணுவ முகாம் உள்ளது. அங்கு சென்ற மோடி ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து பேசினார். அவர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து இனிப்பு வழங்கினார்.
கடந்த 2014-ம் ஆண்டு பா.ஜனதா தலைமையிலான ஆட்சி மலர்ந்து பிரதமரானதும், முதன் முறையாக மோடி இங்கு வந்து ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடினார். தற்போது 2-வது தடவையாக இங்கு வந்துள்ளார்.
2015-ம் ஆண்டு பஞ்சாப்பில் உள்ள இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடினார். கடந்த ஆண்டு இமாசல பிரதேச எல்லையில் உள்ள ராணுவ நிலைகளுக்கு சென்றார். சீன எல்லையில் உள்ள சின்னாவூர் உள்ளிட்ட ராணுவம் மற்றும் திபெத் எல்லை போலீஸ் முகாம்களில் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்.
दीपावली के पावन पर्व पर सभी देशवासियों को हार्दिक शुभकामनाएं। #HappyDiwali to everyone! pic.twitter.com/pFQe9rYrSg
— Narendra Modi (@narendramodi) 19 October 2017